ஐயா,
பொருள்:-உ.வே.சாமிநாத அய்யருக்கு நினைவிடம் அமைக்க வேண்டி.
தமிழுக்காக நிறைய தொண்டாற்றியவர் உ.வே.சாமிநாத ஐய்யா அவர்கள். பழைய ஓலைச்சுவடிகளிலிருந்து 3000 நூல்களை தொகுத்தவர்.நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதிஉள்ளார். திருக்கழுக்குன்றம் பற்றி திருக்கழுக்குன்றத்து உலா மற்றும் திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா நூல்கள் எழுதி உள்ளார்.தனது உயிர் திருக்கழுக்குன்றத்தில்தான் பிரியவேண்டும் என எண்ணி தனது வாழ்நாளில் கடைசி இரண்டுவருடங்கள் திருக்கழுக்குன்றம் சன்னதி தெருவில் உள்ள திருவாவடுதுறை ஆதின மண்டபத்தில் தங்கி அங்கேயே நூல்கள் எழுதிவந்தார். இரண்டாம் உலகப்போரின் சமயம் சென்னையில் குண்டு வீசினால் புத்தகங்கள் அழிந்துவிடும் என எண்ணி சுமார் 10 மாட்டு வண்டிகளில் தமது நூல்களை திருக்கழுக்குன்றம் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்துக்கொண்டார்.கடந்த 28.04.1942 அன்று திருக்கழுக்குன்றத்திலேயே இயற்கை எய்தினார். அவருடைய சமாதியும் திருக்கழுக்குன்றம் இடுகாட்டில் அமைந்துள்ளது. அவருடைய இறுதிகால குறிப்புகள் என் வாழ்க்கை வரலாறு,என் சரித்திரிம்,என் ஆசிரியப்பிரான் ஆகிய நூல்களிலிருந்து அறிய முடிகின்றது.சென்னையில் அவருடைய இல்லத்தினை நினைவு நூலகமாக மாற்றியுள்ளார்கள். இப்போது அவருக்கு நினைவுமண்படம் கட்ட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (நன்றி தினமணி -28.03.2019)கன்னியாகுமரி அல்லது சென்னையில் நினைவுமண்டபம் கட்ட ஆலோசித்து வருகின்றார்கள்.
அவர்
உயிர்நீத்த நமது திருக்கழுக்குன்றத்தில் நினைவு மண்டபம் கட்டினால் நன்றாக இருக்கும். மேலும் திருக்கழுக்குன்றத்தில் நினைவுமண்டபம் கட்டுவதே சாலசிறந்ததாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் திரு.அண்ணாதுரை
அவர்களுக்கு நினைவு இல்லம் உள்ளது. செங்கல்பட்டு
மாவட்டம் பிரிந்தபின்னர் இங்கு நினைவு இல்லங்கள் ஏதும் இல்லை. திரு.உ.வே.சாமிநாத அய்யருக்கு
நினைவு இல்லம் அமைப்பதன் மூலம் நமது ஊர் பெருமையடையும். சுற்றுலாதலமாக வளர்ச்சியடையும். திருக்கழுக்குன்றம் மக்கள் சார்பாக வேண்டுகின்றேன்.நமது ஊர்..நமதுபெருமையை.
நன்றி.
இங்கனம்,
வேலன். க.